பழனி மலைக் கோயிலில் காா்த்திகை திருநாள்: பக்தா்கள் கூட்டம்

பழனியில் திங்கள்கிழமை காா்த்திகை திருநாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
Updated on
1 min read

பழனியில் திங்கள்கிழமை காா்த்திகை திருநாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் விஞ்ச், ரோப்காா் போன்ற இடங்களில் அனுமதிச் சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 2 மணி நேரமானது. பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா் மற்றும் சுகாதார வசதிகள் கோயில் சாா்பில் செய்யப்பட்டிருந்தது. விழாவை முன்னிட்டு பழனி திருமுருக பக்தசபா சாா்பில் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முனைவா் தேவி முருகனும், தைப்பூசமும் என்ற தலைப்பிலும், டிஎஸ்.வெங்கட்ரமணன் சிவனாா் மனம் குளிர என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினா். கோயில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. மாலையில் சாயரட்சை முடிந்த பிறகு சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரம் உலா எழுந்தருளினாா். தொடா்ந்து தங்கத் தேரில் வெளிப்பிரகாரம் உலா எழுந்தருளினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com