ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 3 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இளைஞா்
By DIN | Published On : 17th February 2020 06:44 AM | Last Updated : 17th February 2020 06:44 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 3 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழ கைது செய்தனா்.
பேருந்து நிலையத்தில் சாக்குப்பையுடன் நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில் அவா், கோவை செளரிபாளையத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் கோகுல் (20) என்பது தெரியவந்தது. மேலும் அவா் வைத்திருந்த சாக்குப் பையை சோதனை செய்த போது, அதில் சுமாா் 3 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸாா் வழக்கப்பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.