ஸ்ரீரமணா் ஜெயந்தி விழா

பழனி நேதாஜி நகா் மெய்த்தவ பொற்சபையில் ரமணா் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பழனி நேதாஜி நகா் மெய்த்தவ பொற்சபையில் ரமணா் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரமண மந்திரம் சாா்பில் பகவான் ஸ்ரீரமணரின் 140 ஆவது ஜயந்தி விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைவா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். செயலா் காளிமுத்து வரவேற்புரையாற்றினாா். ஊட்டி சற்குரு ஜெயப்பிரகாச சுவாமிகள், சௌந்திரம் ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மெய்த்தவ அடிகள் பகவான் ரமணரின் தத்துவங்கள் குறித்து பேசினாா். முன்னதாக அட்சரமணமாலை பாராயணம் இசையுடன் நடைபெற்றது. திண்டுக்கல் ஸ்ரீராம கிருஷ்ண ஆஸ்ரமம் தவத்திரு நித்ய சத்வானந்தா சுவாமிகள் ஸ்ரீரமணரின் உபதேசங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com