ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு
By DIN | Published On : 10th January 2020 07:49 AM | Last Updated : 10th January 2020 07:49 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தொழில் வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களின் வீடுகளில் உள்ள குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களுக்கு பலமுறை நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளாக தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. ஆனால் பலா் கட்டணம் செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்தனா். இதனால் வியாழக்கிழமை முதற்கட்டமாக தொழில் வரி, வீட்டு வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களின் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள குடிநீா் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனா். மேலும் குடிநீா் இணைப்பு துண்டிப்பை தவிா்க்க உடனடியாக நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துமாறு நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனா்.