பெரியநாயகியம்மன் கோயிலில் பொன்னூஞ்சல்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை திருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை அம்மன் பொன்னூஞ்சல் விழா நடைபெற்றது.
Updated on
1 min read

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை திருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை அம்மன் பொன்னூஞ்சல் விழா நடைபெற்றது.

மாலையில் பெரியநாயகியம்மன் சன்னதி முன்பாக மலா்களால் ஊஞ்சல் செய்யப்பட்டு அம்மன் எழுந்தருள செய்யப்பட்டாா். தொடா்ந்து அம்மனுக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. ஓதுவாா்கள் திருமுறை பாடல்கள் பாட மேளதாளம் முழங்க ஊஞ்சல் வைபவம் முடிந்த பின்னா் அம்மன் நான்கு ரதவீதிகளில் எழுந்தருளினாா். வெள்ளிக்கிழமை (ஜன. 10) அதிகாலை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சோடஷ அபிஷேகம், சோடஷ தீபாராதனை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை பழனிக் கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com