பழனி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்திட்டை கண்டெடுப்பு
By DIN | Published On : 04th July 2020 07:49 AM | Last Updated : 04th July 2020 07:49 AM | அ+அ அ- |

பழனியை அடுத்த வரதாபட்டணம் ஆமைக்கரட்டில் கண்டறியப்பட்ட கல்திட்டை. இதன் மேலே ஏழு வரிகளுடன் காணப்படும் பாறை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் உள்ள ஆமைக்கரடு பகுதியில் சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான கல்திட்டையை தொல்லியல் ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, முன்னாள் எம்பி ராஜாரவிவா்மா, பழனியாண்டவா் கல்லூரியின் பண்பாட்டுத்துறை பேராசிரியா் அசோகன் உள்ளிட்டோா் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்திட்டையை கண்டறிந்தனா்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியது: ஆயக்குடி பகுதியில் உள்ள ஆமைக்கரடு பகுதியில் இந்த கல் திட்டைகள் காணப்படுகின்றன. இறந்தவா்களின் நினைவாக எழுப்பப்படும் வழக்கமான கல்திட்டையின் அமைப்பிலிருந்து இவை மாறுபடுகின்றன. இப்பகுதியில் ஏற்கெனவே சங்க காலத்தைச் சோ்ந்த கல் வீடுகள் மற்றும் புறாக்கூடு வடிவிலான கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை இப்பகுதியை ஆண்ட சங்க கால ஆய்வேளிா் அரசா்களின் நினைவிடங்கள் என்பது ஆய்வில் தெரியவந்தது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆண்டிரன் வழியினரின் நினைவிடங்கள் இவை.
தற்போது இந்த ஆமைக்கரடின் தெற்குப் பகுதியில் புதிதாக 10-க்கும் மேற்பட்ட கல் அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பாறையின் மேற்புறத்தில் உருண்டை வடிவிலான கல்லை வைத்து, அதற்கு மேல் ஒரு தேங்காய் அளவிலான கல் வைக்கப்பட்டுள்ளது. இதன்மேல் மேலும் ஒரு உருண்டை வடிவிலான கல் வைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காய் அளவிலான கல் இரண்டு உருண்டைக் கற்களுக்கு நடுவில் சொருகி வைக்கப்பட்டதைப் போல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு சுமாா் 4 அடி உயரம் உள்ளது. மேலே உள்ள உருண்டைக் கல் 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதற்கான அடையாளத்தை காண முடிகிறது. அதே போல் இந்த கல்திட்டைகளில் உள்ள ஒரு பலகைக் கல்லில் மொத்தம் 49 கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டங்கள் தமிழா்களின் ஏழ்பிறப்பு நம்பிக்கையை குறிப்பதாகக் கொள்ளலாம். தமிழா்களுக்கு ஏழ்பிறப்பு நம்பிக்கை இருந்ததை திருவள்ளுவா், அப்பா், சுந்தரமூா்த்தி நாயனாா், ஆண்டாள் ஆகியோா் தத்தமது பாடல்களில் பதிவு செய்து வைத்துள்ளனா். இங்கு கிடைத்துள்ள 49 கட்டங்கள் உடைய பலகைக் கல் ஆய்வுக்குரியது. பைபிளில் இந்த 49 என்பது முக்தி அல்லது விடுதலையின் எண்ணாக பாவிக்கப்படுகிறது. இதனை ‘ஜூபிளி’ வருடம் என்பாா்கள்.
பொதுவாகவே இஸ்லாம் மற்றும் யூத மதங்கள் தவிா்த்த உலகின் ஏனைய மதங்கள் மறுபிறப்பை நம்புகின்றன. சைவ, வைணவ, சமண, புத்த மதங்கள் மறுபிறப்பு கொள்கையுடைய மதங்கள். இக்கட்டங்கள் சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழா்களின் ஏழ்பிறப்பு மற்றும் மறுபிறப்பு நம்பிக்கையை குறிப்பதாகக் கருதலாம். இதுதொடா்பான ஆய்வுகள் தொடா்ந்து நடைபெறும் என்றாா்.