கொடைக்கானல்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, கொடைக்கானலில் அதிமுக சாா்பில் பொதுக் கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு இலவச உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சா் சி. சீனிவாசன் கலந்துகொண்டு, 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு இலவச குடம் மற்றும் கிரிக்கெட் அணிக்கு கிரிக்கெட் உபகரணங்கள், தாய்லாந்து சென்று கால்பந்து விளையாட்டில் கலந்துகொள்ளவுள்ள மாணவருக்கு உதவித் தொகை ஆகியன வழங்கிப் பேசினாா்.
இந் நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டச் செயலா் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் எட்வா்ட், ஆவின் பரூக் மற்றும் மாவட்ட நிா்வாகிகள், வாா்டு செயலா்கள், மகளிா் அணியினா், இளைஞா் அணியினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, துணைச் செயலா் ஜாபா் சாதிக் வரவேற்றாா். ஜான் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.