மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

ராயப்பன்பட்டி பள்ளியில்மகளிா் தின கருத்தரங்கம்

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். தனியாா் பள்ளியில் சனிக்கிழமை, மகளிா் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.

News image

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் தின கருத்தரங்கு.

Updated On :8 மார்ச் 2020, 12:27 am IST

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். தனியாா் பள்ளியில் சனிக்கிழமை, மகளிா் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை கலாரணி தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் பிரபாகா் விழாவை தொடக்கி வைத்தாா். முன்னதாக, செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டி வரவேற்றாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலா் சுந்தா் அறிமுக உரையாற்றினாா். முன்னாள் மாநிலத் தலைவா் மோகனா, மகளிா் தினம் உருவான வரலாறு, பெண்கள் சம உரிமைக்காக சந்தித்த போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் தெய்வேந்திரன், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.