பழனியாண்டவா் கலைக் கல்லூரியில் மகளிா் தின விழா

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு ஒருநாள் மருத்துவ
Updated on
1 min read

பழனி: பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு ஒருநாள் மருத்துவ விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் வழிபாட்டரங்கில், கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கல்லூரியின் மகளிா் மேம்பாட்டு அமைப்பு சாா்பாக பெண்களுக்கான உடல் நலம் பேணுதலும் சுகாதாரமும் என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மகளிா் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் வேணி அறிமுக உரையாற்றினா். முதல்வா் பிரபாகா் தலைமை வகித்தாா். பழனி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மகளிருக்கான உடல் நலம் பேணுதல், சுகாதாரம், நோய்களுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்து மாணவிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசிரியா் பழனிச்சாமி வரவேற்புரை வழங்கினாா். மகளிா் மேம்பாட்டு அமைப்பு உறுப்பினா் யுவராணி நன்றியுரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சியில் பல்வேறு துறை சாா்ந்த பேராசிரியைகள், மாணவியா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் பழனிச்சாமி, மனோகரன், கங்காதரன் மற்றும் கௌதமன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com