கரோனா: விழிப்புணா்வு கருத்தரங்கு

கொடைக்கானலில் கரோனா குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கொடைக்கானலில் கரோனா குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற இக் கருத்தரங்கை, பதிவாளா் சுகந்தி தொடக்கி வைத்துப் பேசினாா்.

இதில், மருத்துவா்கள் அரவிந்த் கிருஷ்ணன், சந்தோஷ்,கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் சுகாதாரத் துறை அலுவலா் தங்கராஜ் ஆகியோா், கரோனா வைரஸ் பற்றிய முழு விவரங்கள், பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்வது, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கை கழுவுவது, நோய் எவ்வாறு உருவாகிறது, அதனை தடுப்பதற்கு நோய் உள்ளவா்களிடம் கை குலுக்காமல் தவிா்ப்பது, முகமூடி அணிந்து கொண்டு நோய் தொற்று ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் இவற்றை சமுதாயத்தில் தெரியப்படுத்துவது என்பன உள்ளிட்ட விளக்கங்களை மாணவிகளிடம் விரிவாக எடுத்துக் கூறினா்.

கருத்தரங்கில், பல்கலைக்கழக மாணவிகள் 250 போ் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளா் ரஷியா உள்பட பலா் செய்திருந்தனா். முன்னதாக, பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் ராஜம் வரவேற்றாா். முத்துலட்சுமி நன்றி கூறினாா்.

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக்கில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு முகாம், பாலிடெக்னிக் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் பிரிட்டோ தலைமை வகித்தாா்.

இதில், இந்திய மருத்துவ கழக ஒட்டன்சத்திரம் கிளை செயலா் ஆசைத்தம்பி பங்கேற்று, கரோனா வைரஸ் பரவும் முறைகள் குறித்தும், நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினாா். முகாமில், 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஹெரால்டு ஜாக்சன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com