கொடைக்கானல் அருகேமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகே திங்கள்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Updated on
1 min read

கொடைக்கானல் அருகே திங்கள்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வில்பட்டி பிரிவு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த மரம் அகற்றப்பட்டது. அதன் பின் போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com