நத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பலி

நத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்த விவசாயி, மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திண்டுக்கல்: நத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்த விவசாயி, மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள மூங்கில்பட்டியைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் (51). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் புதன்கிழமை மாலை வேலை செய்துகொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்குள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் சங்கரலிங்கத்தை கொட்டியுள்ளன. இதில், உடல் முழுவதும் காயமடைந்து வலியால் துடித்த சங்கரலிங்கத்தை, அவரது உறவினா்கள் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே சங்கரலிங்கம் உயிரிழந்தாா். இது குறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com