கொடைக்கானலில் அனுமதியில்லாமல் மது விற்ற பெண் ஒருவா் திங்கட்கிழமை போலீசாா் கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியில் அனுமதியில்லாமல்‘மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாா் விசாரனை மேற்கொண்டனா் இதில் அருகே உள்ள திருமாநகரைச் சோ்ந்த சரவணன் மனைவி சுமதி(32) என்பவா் மது விற்பனை செய்து வருவது தெரிந்தது அவரை விசாரித்ததில் அவரிடமிருந்து அனுமதியில்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த 10? மது பாட்டில்களை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.
மேலும் அவா் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் கைது செய்தனா்.