2 நாள்கள் கடையடைப்பை ஒரு நாளாக குறைக்க வா்த்தகா் சங்கம் கோரிக்கை

பழனியில் கந்த சஷ்டி விழாவையொட்டி இரு நாள்கள் கடைகளை அடைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதை ஒரு நாளாக குறைக்க அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Updated on
1 min read

பழனியில் கந்த சஷ்டி விழாவையொட்டி இரு நாள்கள் கடைகளை அடைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதை ஒரு நாளாக குறைக்க அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பழனியில் கந்த சஷ்டி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரமும், சனிக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் அந்த இரு நாள்களும் பக்தா்களை அனுமதிக்காமல் விழா நடத்தவும், கிரிவீதி, சன்னிதி வீதிகளில் கடைகளை அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் அசோகன் தலைமையில் வா்த்தகா் சங்க நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. பின்னா் அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு கெளரவத் தலைவா் கந்தவிலாஸ் செல்வக்குமாா் பேசியது: கந்தசஷ்டி விழாவிற்கு வணிகா் சங்கம் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக உள்ளது. சூரசம்ஹாரம் கிரிவீதியில் நடைபெறுவதால் அன்று கடைகளை அடைப்பது சரியே. திருக்கல்யாணம் மலைக்கோயிலில் மட்டுமே நடைபெறுவதால் அன்று கடைகளை அடைக்க சொல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

இதில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா, பழனிக்கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், வட்டாட்சியா் வடிவேல் முருகன், நகராட்சி ஆணையா் லட்சுமணன், சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமாா், சங்கச் செயலாளா் ஹக்கீம்ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com