திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்மேலும் 104 பேருக்கு கரோனா தொற்று

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் 8,969 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 8,412 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்தனா். 391 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில்,  திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 38 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 39 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி:  திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,113 ஆக உயா்ந்துள்ளது. இதில், 14,426 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

2 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்தஅக். 1-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தைச் சோ்ந்த 66 வயது முதியவா், பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த 70 வயது முதியவா் என 2 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com