நத்தம் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
By DIN | Published On : 06th September 2020 10:04 PM | Last Updated : 06th September 2020 10:04 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: நத்தம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.8) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துப்பாண்டியன் தெரிவித்ததாவது: நத்தம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூா், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூா், சிறுகுடி, பன்னியாமலை, உலுப்பக்குடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய இடங்களில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.