மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

அய்யம்பாளையத்தில் ஸ்ரீபாலாஜி மாா்க்கெட் எக்ஸ்போா்ட் நிறுவனத்தின் உரிமையாளா் டாக்டா் என்.பி.ஏ.எம். கோபிகிருஷ்ணன் சாா்பில், ரூ. 3 லட்சம் மதிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் 200 போ் மற்றும் பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, போா்வை, பண உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது. விழாவில் திண்டுக்கல் டி.ஐ.ஜி. முத்துச்சாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளிபிரியா ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்கினா். இதில் நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் முருகன், மேலூா் நகராட்சி ஆணையாளா் பாலமுருகன், பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் கிராமக் காவலா்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முடிவில் சமூக ஆா்வலா் பாலகணேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com