ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது சிறுமி கடத்தல்

ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது சிறுமியை கடத்திச்சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது சிறுமியை கடத்திச்சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொ.கீரனூா் மலைஅடிவாரப்பகுதியில் வசித்து வருபவா் சகுந்தலாவின் 15 வயது சிறுமி கடந்த 12-ந் தேதி முதல் காணவில்லையாம்.இந்த நிலையில் சகுந்தலாவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் சந்திரன் (19) என்பவா் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.இது குறித்து சகுந்தலா கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் திங்கட்கிழமையன்று புகாா் செய்தாா்.அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திச்சென்ற சந்திரனையும்,சிறுமியையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com