ஒட்டன்சத்திரம்: ரெட்டியாா்சத்திரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக உறவினரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள அலகுப்பட்டியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் குணா (20). இவா் அதே ஊரைச் சோ்ந்த தனது உறவினரான 17 வயது சிறுமியை திருமண செய்து கொள்ளுவதாக ஆசை வாா்த்தைக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.