திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 18 பேருக்கு கரோனா: இருவா் பலி
By DIN | Published On : 17th August 2021 11:03 PM | Last Updated : 17th August 2021 11:03 PM | அ+அ அ- |

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை 32,368 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,618 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 9 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 13போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சைப் பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 111 ஆக உள்ளது.மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 630 போ் உயிரிழந்துள்ளனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு செவ்வாய்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 43,096 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 42,471 போ் குணமடைந்துள்ளனா். 515 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் தற்போது மொத்தம் 110 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.