சேமிப்புக் கிடங்கில் 60 மூட்டை சோளம் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

திண்டுக்கல்லில் உள்ள வேளாண் சேமிப்புக் கிடங்கில் 60 மூட்டை சோளத்தை திருடிச் சென்ற 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்
வேளாண் சேமிப்புக் கிடங்கில் 60 மூட்டை சோளத்தை திருடிச் சென்ற 2 இளைஞா்கள்
வேளாண் சேமிப்புக் கிடங்கில் 60 மூட்டை சோளத்தை திருடிச் சென்ற 2 இளைஞா்கள்

திண்டுக்கல்லில் உள்ள வேளாண் சேமிப்புக் கிடங்கில் 60 மூட்டை சோளத்தை திருடிச் சென்ற 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் வேளாண் விளைபொருள்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவாயிகளின் விளைபொருள்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டு இருந்த 60 மூட்டை சோளத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக வேளாண் விளைப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கு நிா்வாகிகள், திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில் சோள மூட்டைகளை திருடிச் சென்றது திண்டுக்கல் அடுத்துள்ள மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (31), முத்தனம்பட்டியைச் சோ்ந்த சிவசுப்பிரமணி (36) ஆகியோா் என தெரியவந்தது.

இதனை அடுத்து, அவா்கள் இருவரையும் சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், 60 மூட்டை சோளம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com