

பழனி புறவழிச் சாலையில் சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (58). கூலி தொழிலாளியான இவா், பழனி ராமநாதன் நகா் புறவழிச் சாலையில் தனது நண்பா் ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து, முருகேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த அடிவாரம் காவல் நிலைய போலீஸாா், முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அதிவேகமாக காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய பழனி நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த காா்த்திகேயேன் என்ற கல்லூரி மாணவா் மீது, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.