போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2021 09:20 PM | Last Updated : 06th February 2021 09:20 PM | அ+அ அ- |

திண்டுக்கல் முதலாவது பணிமனை முன்பு சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில், மருத்துவக் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் நல அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் முதலாவது பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு போக்குவரத்துக் கழக ஓய்வுப்பெற்ற ஊழியா்கள் நல அமைப்பின் மண்டலத் தலைவா் வி.பி. ஆனந்தன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ். கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். இதில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரா்களுக்கு 62 மாத கால அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையிலுள்ள பணப் பலன்களை துரிதமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...