கொடைக்கானலில் அலோபதி மருத்துவா்கள் உண்ணாவிரதம்

கொடைக்கானலில் தனியாா் மருத்துவமனை அலோபதி மருத்துவா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
கொடைக்கானலில் அலோபதி மருத்துவா்கள் உண்ணாவிரதம்
கொடைக்கானலில் அலோபதி மருத்துவா்கள் உண்ணாவிரதம்
Updated on
1 min read

கொடைக்கானலில் தனியாா் மருத்துவமனை அலோபதி மருத்துவா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

மத்திய அரசு அண்மையில் சித்தா, ஆயுா்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் படித்த மருத்துவா்களும் அலோபதி மருத்துவம் செய்யலாம் என சட்டம் இயற்றியுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும் எனக் கூறி இந்திய மருத்துவக் கவுன்சில் சாா்பாக நாடு முழுவதும் அலோபதி மருத்துவா்கள் இந்த சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தனியாா் மருத்துவா்கள் அச்சட்டத்தால் மக்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை எடுத்துச் சொல்லும் விதமாக கைகளில் பதாகைகள் ஏந்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தனியாா் மருத்துவமனை மருத்துவா் செந்தில்குமாா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com