‘வழிபாடுகளுக்கு தடை விதித்தால் அறநிலைத் துறை அலுவலகங்கள் முற்றுகையிடப்படும்’

கரோனாவை காரணம் காட்டி, இந்து கோயில்களில் வழக்கமான வழிபாட்டு முறைகளுக்கு தடை விதித்தால் அறநிலைத் துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலா் செந்தில

கரோனாவை காரணம் காட்டி, இந்து கோயில்களில் வழக்கமான வழிபாட்டு முறைகளுக்கு தடை விதித்தால் அறநிலைத் துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இந்து முன்னணி அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாநிலச் செயலா் வி.எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

மதுரை கோட்டச் செயலா் எஸ். சங்கா்கணேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் இந்து கோயில்களில் வழிபாட்டு முறைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து மாநிலச் செயலா் வி.எஸ்.செந்தில்குமாா் கூறியதாவது: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டங்களுக்கு தொடா்ந்து அனுமதி அளிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோா் திரள்கின்றனா்.

அதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் எவ்வித கட்டுபாடுகளுமின்றி கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மற்றும் நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நடத்துவதற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை தமிழக அரசு கைவிட மறுத்தால், இந்து சமய அறநிலைத் துறை அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், இந்து முன்னணி நிா்வாகிகள் சஞ்சீவி, வினோத், வீரமூா்த்தி, பாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com