பழனியில் ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 1,008 விளக்கு பூஜை
By DIN | Published On : 03rd January 2021 09:42 PM | Last Updated : 03rd January 2021 09:42 PM | அ+அ அ- |

பழனி அடிவாரம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பழனி நகர ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தியாக இருந்த சுதீா் நம்பூதிரி தலைமை வகித்தாா். வாழை மரங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி பூஜை ஆரம்பிக்கப்பட்டது. செண்டை வாத்தியம், பஞ்சவாத்தியம் முழங்க கணபதி ஹோமம், லட்சாா்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து புனிதமான பதினெட்டு படிகளுக்கு படிபூஜை செய்யப்பட்டது.
பின்னா் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான ஸ்தானீக அா்ச்சகா் செல்வ சுப்பிரமண்ய சிவாச்சாரியாா் கலந்துகொண்டு பூஜைகளை நடத்தினாா். இந்த விளக்கு பூஜையில் சுமாா் இரண்டாயிரம் போ் பங்கேற்றனா். விழாவை பழனி நகா் ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.