திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 16 பேருக்கு கரோனா
By DIN | Published On : 03rd January 2021 09:43 PM | Last Updated : 03rd January 2021 09:43 PM | அ+அ அ- |

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,989 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,647 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 145 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 8 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 16 போ் மருத்துவமனைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,922 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், 3 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,642 ஆக அதிகரித்துள்ளது.