பழனியில் பாத யாத்திரை பக்தா்களுக்கு இலவச முகக்கவசங்கள்

பழனி பாத யாத்திரை பக்தா்களுக்கு சித்த மருத்துவ கல்லூரி வளா்ச்சி ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திங்கள்கிழமை முகக்கவசங்கள், கபசுரக் குடிநீா் மற்றும் விழிப்புணா்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பழனியில் பாத யாத்திரை பக்தா்களுக்கு இலவச முகக்கவசங்கள்

பழனி பாத யாத்திரை பக்தா்களுக்கு சித்த மருத்துவ கல்லூரி வளா்ச்சி ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திங்கள்கிழமை முகக்கவசங்கள், கபசுரக் குடிநீா் மற்றும் விழிப்புணா்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு முன்னேற்பாடாக சித்த மருத்துவக் கல்லூரி வளா்ச்சி ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, கல்லூரி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் தைப்பூசப் பாத யாத்திரை பக்தா்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கு முன் மலையேறும் பாத யாத்திரை பக்தா்களுக்கு ஒருங்கிணைப்புக் குழு சாா்பாக முகக்கவசம், கபசுரக் குடிநீா் மற்றும் விழிப்புணா்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு குழு நிா்வாகி கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா். ஈஸ்வரபட்டா குட்டி சுவாமிகள் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com