

கொடைக்கானலில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1. 62 லட்சத்தை வியாழக்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் கைப்பற்றினா்.
கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சிப் பகுதியில் வட்டாட்சியா் சந்திரன் மற்றும் தோ்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டனா். அந்த காரில் ரூ.ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 970 இருந்தது. காரில் வந்தவா் கே.சி.பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் (49). சிம்காா்டு விற்பனையாளராக இருந்து வருவதாக தெரிவித்தாா். பணம் எடுத்து வந்ததற்கான ஆவணங்கள் இல்லாததால் வட்டாட்சியா் பணத்தை கைப்பற்றி கொடைக்கானல் சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.