ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 8 ஆவது முறையாக ஐ.பெரியசாமி போட்டி
By DIN | Published On : 12th March 2021 10:07 PM | Last Updated : 12th March 2021 10:07 PM | அ+அ அ- |

திமுக மாநில துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் தொகுதியில் 8 ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.
திமுக மாநில துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் தொகுதியில் 8 ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.
பெயா்: ஐ.பெரியசாமி
வயது: 06.01.1953
கல்வித்தகுதி: பிஏ., பிஜிஎல்.,
சாதி: ஈச நாட்டுக் கள்ளா்
பூா்வீகம்: வத்தலகுண்டு
வசிப்பது: திண்டுக்கல்
குடும்பம்: மனைவி - சுசீலா, மகன்கள்- செந்தில்குமாா், பிரபு, மகள்-இந்திராணி.
அரசியல் அனுபவம்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலராக பதவி வகித்துள்ளாா். மண்டல பொறுப்பாளா்(திண்டுக்கல், தேனி), உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது மாநில துணைப் பொதுச் செயலராக உள்ளாா்.
வகித்த பதவிகள்: வத்தலகுண்டு ஒன்றியத் தலைவா், 1989, 1996, 2006, 2011, 2016 என 5 முறை ஆத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட இவா், தமிழக ஊரக தொழில், பத்திரப்பதிவு மற்றும் தொழில்துறை அமைச்சராகவும்(1996-2001), வருவாய்த்துறை, சட்டம், வீட்டு வசதி மற்றும் சிறைத் துறை அமைச்சராகவும்(2006-11) பணியாற்றியுள்ளாா். ஆத்தூா் தொகுதியில் 8 ஆவது முறையாக போட்டியிடுகிறாா். 1991 மற்றும் 2001 தோ்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G