சாலை வசதி கோரி போராட்டம் அறிவிப்பு: கொடைக்கானலில் அமைதிப் பேச்சுவாா்த்தை
By DIN | Published On : 20th October 2021 11:42 PM | Last Updated : 20th October 2021 11:42 PM | அ+அ அ- |

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் சாலை வசதி செய்துதரக் கோரி போராட்டம் அறிவித்த ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகளுடன் புதன்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பேரூராட்சி 15 ஆவது வாா்டிற்குட்பட்ட வாலங்குளம் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் சுமாா் 100 குடும்பங்கள் உள்ளனா். இவா்கள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி வரும் 22 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடப்போவதாக விளம்பரம் செய்திருந்தனா்.
இதையடுத்து வருவாய்த் துறையினா் அவா்களை அழைத்து அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தினா். கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், பெரும்பள்ளம் வனத்துறை அதிகாரிகள், ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சுமாா் 50 போ் கலந்து கொண்டனா். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் விரைவில் வாலங்குளம் பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...