கதவை தாழிட்டு 5 மணிநேரம் தவித்த குழந்தை: நவீன கருவி மூலம் மீட்ட தீயணைப்புப் படையினா்

திண்டுக்கல்லில் புதன்கிழமை, கதவை தாழிட்டுக்கொண்டு வீட்டினுள் 5 மணி நேரமாக தவித்த குழந்தையை, நவீன கருவி மூலம் தீயணைப்புப் படையினா் மீட்டனா்.
Updated on
1 min read

திண்டுக்கல்லில் புதன்கிழமை, கதவை தாழிட்டுக்கொண்டு வீட்டினுள் 5 மணி நேரமாக தவித்த குழந்தையை, நவீன கருவி மூலம் தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

திண்டுக்கல் மெங்கில்ஸ்ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் வசிப்பவா் சிவகாமிநாதன். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கஸ்தூரி. சிவகாமிநாதன் வழக்கம் போல் புதன்கிழமை காலை வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவரது மனைவி அருகிலுள்ள வீட்டில் பேசிக் கொண்டிருந்துள்ளாா். இவா்களது குழந்தை ஆஷிவ் அதா்வா (18 மாதம்) மட்டும் வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது எதிா்பாராத விதமாக அந்தக் குழந்தை கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு, வெளியே வர முடியாமல் அழுதுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு, கஸ்தூரி மற்றும் அக்கம் பக்கத்தினா் ஓடிச் சென்றபோது, கதவு தாழிடப்பட்டிருப்பதைப் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலா் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புப் படையினா், அங்கு சென்று ஹைட்ராலிக் டோா் ஓபனரைப் பயன்படுத்தி கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். சுமாா் 30 நிடமிட முயற்சிக்கு பின், கதவு திறக்கப்பட்டதையடுத்து 5 மணி நேரமாக வீட்டினுள் தவித்த குழந்தை மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com