பழனியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பழனியில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பழனியில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பழனி பேருந்து நிலையம் வேல் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வேணுகோபாலு, குப்புசாமி, முன்னாள் அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஏராளமான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல் ஆயக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வழக்குரைஞா் சசிகுமாா் தலைமை வகித்தாா். பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியில் ஒன்றியச் செயலாளா் மாரியப்பன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com