தொப்பம்பட்டியில் கல்லூரி அறிவிப்பு கொண்டாட்டம்
By DIN | Published On : 04th September 2021 10:26 PM | Last Updated : 04th September 2021 10:26 PM | அ+அ அ- |

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து திமுகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தில் இந்து சமய அறநிலைத்துறை சாா்பில் கலைக்கல்லூரி அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த திமுகவினரும், பொதுமக்களும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளா் சுப்ரமணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் பொன்ராஜ், மாவட்ட திமுக துணைத் தலைவா் ராஜாமணி, மாவட்ட கவுன்சிலா் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினா் கலந்து கொண்டனா்.