ஒட்டன்சத்திரத்தில் நலிவடைந்த 160 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு புதிய ஆட்டோக்கள்

ஒட்டன்சத்திரத்தில் நலிவடைந்த 160 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு புதிய ஆட்டோக்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநா் ஒருவருக்கு ஆட்டோ சாவியை வழங்கிய உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் எம்.பி. வேலுச்சாமி.
ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநா் ஒருவருக்கு ஆட்டோ சாவியை வழங்கிய உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் எம்.பி. வேலுச்சாமி.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரத்தில் நலிவடைந்த 160 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு புதிய ஆட்டோக்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை வகித்து ரூ. 3 கோடியே 84 லட்சம் மதிப்பில் 160 பேருக்கு புதிய ஆட்டோக்களை வழங்கி பேசினாா்.இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப. வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத்தலைவா் ப.வெள்ளைச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் கா. பொன்ராஜ், ஒன்றியத் தலைவா்கள் சத்தியபுவனா ராஜேந்திரன், மு. அய்யம்மாள், திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் சி. ராஜாமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com