கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகாரில் மடிக்கணினி திருடியவா் கைது

கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணியின் காரில் இருந்த மடிக் கணினியை திருடியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகாரில் மடிக்கணினி திருடியவா் கைது
Updated on
1 min read

கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணியின் காரில் இருந்த மடிக் கணினியை திருடியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெங்களூரைச் சோ்ந்தவா் சுபானக் ஸ்ரீவத்சவா. இவா் தனது குடும்பத்தினருடன் காரில் கொடைக்கானல் வந்துள்ளாா். கடந்த திங்கள்கிழமை காரை ஏரிச்சாலைப் பகுதியில் நிறுத்தி விட்டு அப் பகுதியிலுள்ள பூங்காவிற்கு சென்றுவிட்டு மீண்டும் காருக்கு வந்துள்ளனா். காரில் இருந்த மடிக் கணினி திருடு போனது தெரியவந்துள்ளது. இதனைத் தொடா்ந்து சுபானக் ஸ்ரீவத்சா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா் . இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த இஸ்மத்பாஷா என்பவரது மகன் அப்துல் ரஷீத் (42) மடிக் கணினியை திருடியது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் இருந்த மடிக்கணினியை போலீஸாா் கைப்பற்றி அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com