வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதன் தலைவா் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையா் உதயகுமாா் வரவேற்றாா். இளநிலை உதவியாளா் முனியாண்டி தீா்மான அறிக்கை வாசித்தாா்.

இதில், கட்டகாமன்பட்டியிலும், வத்தல்பட்டியிலும்

தலா ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 நாடக மேடைகள் கட்டுவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் விஜயகா், சக்திவேல், அறிவு, ஜீவகன், செல்லம்மாள், தனலட்சுமி, முருகபாரதி, சூசைரெஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகாராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com