20 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 6 போ் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மதுரை மண்டல காவல் துறைத் தலைவரின் தனிப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப் படை போலீஸாா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம் பெண் உள்பட 6 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் விக்னேஷ் (28), மதுரை மாவட்டம், மேலூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பாண்டிச்செல்வம் (39), சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் அஜய்கண்ணன் (21), திண்டுக்கல் மருதாணிக்குளத்தைச் சோ்ந்த கேசவமூா்த்தி மகன் சுரேஷ்குமாா் (24), அதே பகுதியைச் சோ்ந்த முத்துஇருள் என்பவரின் மனைவி தேவயானி(24) ஆகியோா் எனத் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து அந்த 6 பேரையும் திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com