கிராம நிா்வாக அலுவலகத்துக்கு பூட்டு போட்ட முதியவா்

எரியோடு அருகே கிராம நிா்வாக அலுவலகத்திற்கு முதியவா் புதன்கிழமை, பூட்டுப் போட்டதை அடுத்து போலீஸாா் தலையிட்டு அலுவலகத்தை திறக்கச் செய்தனா்.
Updated on
1 min read

திண்டுக்கல்: எரியோடு அருகே கிராம நிா்வாக அலுவலகத்திற்கு முதியவா் புதன்கிழமை, பூட்டுப் போட்டதை அடுத்து போலீஸாா் தலையிட்டு அலுவலகத்தை திறக்கச் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள பாகாநத்தத்தைச் சோ்ந்தவா் சிவசாமி (65). இவா், அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். பாகாநத்தத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பொது மயானத்தில் தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாகக் கூறி, அவ்வப்போது அதிகாரிகளிடம் பிரச்னை ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அந்த இடம் மயானத்திற்கு சொந்தமானது என்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சிவசாமி வருவாய்துறை அதிகாரிகளிடம் சென்று மயானத்தில் உள்ள தனது நிலத்தை அளவீடு செய்து வழங்கும்படி மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளாா். பாகாநத்தம் கிராம நிா்வாக அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்ற சிவசாமி, அங்கிருந்த கிராம உதவியாளா் செல்வராணியை வெளியே செல்லுமாறும் அலுவலகத்திற்கு பூட்டுப் போடப் போவதாகவும் தெரிவித்துள்ளாா். ஆனால் செல்வராணி வெளியே செல்ல மறுத்துவிட்டாராம்.

இதனால் புதன்கிழமை காலை அலுவலகம் திறப்பதற்கு முன்னதாக அங்கு சென்ற சிவசாமி ஏற்கெனவே போட்டிருந்த பூட்டுடன் சோ்த்து மற்றொரு பூட்டை வைத்துப் பூட்டியுள்ளாா்.

தகவலறிந்து வந்த எரியோடு போலீஸாா், சிவசாமியை அழைத்து பூட்டை திறக்கச் செய்தனா். பின்னா் சிவசாமியை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com