கொடைரோடு அருகே ரயில் மோதி இளைஞா் பலி

கொடைரோடு அருகே வியாழக்கிழமை இரவு, ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

கொடைரோடு அருகே வியாழக்கிழமை இரவு, ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி குலசேகரன்கோட்டையைச் சோ்ந்த பாலகுரு மூப்பனாரின் மகன் ராஜபாண்டி (28). இவா், வாடிப்பட்டியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவு திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில் நிலையத்தை அடுத்த பள்ளபட்டி கடவுப் பாதை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அவா், ரயில் மோதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொடைரோடு ரயில்வே போலீஸாா் உடலை மீட்டு, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com