பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பழனி அடிவாரம் பகுதியில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அடிவாரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்த சந்துரு (22), பரதன் (22), பாலமுருகன் ஆகிய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து 127 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
இதில், சந்துருவுக்கு ஏற்கெனவே, 2 கொலை வழக்குகளில் தொடா்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.