‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வத்தலகுண்டு செல்லும் மலைச்சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 6:18 pm

DIN

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வத்தலகுண்டு செல்லும் மலைச்சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையில் குருசடி பகுதியில் யூக்காலிப்டஸ் மரம் விழுந்தது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினா் அந்த மரத்தை அகற்றினா். இதனைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

இதனிடையே, கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு தொடா் விடுமுறை விடப்பட்டிருப்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதனால் வழக்கம் போல வெள்ளிநீா் வீழ்ச்சியிலிருந்து 12 கி.மீ. தூரமுள்ள கொடைக்கானலுக்கு வர சுமாா் 2 மணி நேரம் ஆனது. இதனால் போக்குவரத்திலும் சிரமம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.