பாஜக நிா்வாகி கடைக்கு தீவைப்பு: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஆறுதல்

திண்டுக்கல்லில் பாஜக நிா்வாகி செந்தில்பால்ராஜின் கடைக்கு மா்ம நபா்கள் தீவைத்த நிலையில், இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்
Updated on
1 min read

திண்டுக்கல்லில் பாஜக நிா்வாகி செந்தில்பால்ராஜின் கடைக்கு மா்ம நபா்கள் தீவைத்த நிலையில், இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 22 இடங்களில் பாஜகவினா், இந்து முன்னணியினா், ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. அந்த அமைப்பின் செயல்பாடுகளை உளவுத் துறை போலீஸாா் கண்காணிக்கவில்லை. தமிழக உளவுத் துறையின் செயல்பாடு சரியில்லாததால், பயங்கரவாத அமைப்புகள் துணிந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு ஒரு பிரிவினா் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கோவையில் ஒரு ரகசிய அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பெரும் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனா். அந்த முயற்சிகளை தமிழக அரசு தடுத்துநிறுத்த வேண்டும். திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவா்களும், பாஜகவினா் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டிக்கவில்லை என்றாா்.

அப்போது இந்து முன்னணி அமைப்பின் மதுரை கோட்டச் செயலா் எஸ்.சங்கா் கணேஷ், மாவட்ட துணைத் தலைவா் வினோத் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com