‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் விளைச்சல் அதிகரிப்பு

கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் விளைச்சல் அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் விளைச்சல் அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, ஆரஞ்சு, பலா, பேரிக்காய், அவக்கோடா மற்றும் பேஷன் புரூட்ஸ்,பிளம்ஸ் பழங்கள் விளைகின்றன. இதில் பேஷன் புரூட்ஸ் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விளையக் கூடியது. ஒரு காலநிலையில் நான்கு மாதங்கள் வரை விளையும் தன்மை கொண்டது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் கொடைக்கானல் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், பிரகாசபுரம், செண்பகனூா், அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேஷன் புரூட்ஸ் நன்கு விளைந்துள்ளது. தற்போது இவற்றை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பழங்கள் குளிா்ச்சி கொண்டவை. நீரழிவு நோய்க்கும் ஏற்ாக இருப்பதாகவும், கொடைக்கானலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரு, கேரளத்துக்கும் அனுப்புவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பழவியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் பேஷன் புரூட்ஸ் நன்கு விளைந்துள்ளது. இந்த பழங்கள் தொடா்ந்து 4 மாதங்கள் வரை விளையும். ஒரு பழம் ரூ. 10 முதல் ரூ. 12-வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுக்கு அதிக விலை கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.