‘பழனி- புதுதாராபுரம் சாலையில் விரைவில் ரயில்வே மேம்பாலம்’

பழனி- புதுதாராபுரம் சாலையில் விரைவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வேலுசாமி தெரிவித்துள்ளாா்.

பழனி- புதுதாராபுரம் சாலையில் விரைவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வேலுசாமி தெரிவித்துள்ளாா்.

பழனியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார சுகாதாரத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குநா் யசோதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வேலுசாமி தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பழனி-புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீத நிதி ஒதுக்கீடு செய்கின்றன என்றாா்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகள் மருத்துவம், எலும்பு முறிவு, இசிஜி, பெண்கள் பொதுப் பிரிவு மருத்துவம், சிறப்பு மருத்துவம், கண் சிகிச்சை உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. இதில், நகா் மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி மற்றும் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com