வத்தலகுண்டு அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்பட்டியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (31). இவா், சித்தரேவு பகுதியைச் சோ்ந்த 15 வயதான சிறுமியை கடந்த 10.9.2021 அன்று திருமணம் செய்துள்ளாா்.
இந்நிலையில், அந்த சிறுமி, திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்தில் விரிவாக்க அலுவலா் கஸ்தூரியிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் லதா, மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தாா். திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் சிலம்பரசியும் கைது செய்யப்பட்டாா்.