நிலக்கோட்ைரு அருகே ஒரே நாளில் 3 போ் தற்கொலை

நிலக்கோட்டை அருகே ஒரே நாளில் மூன்று ஆண்கள் தற்கொலை செய்து கொண்டனா்.

நிலக்கோட்டை அருகே ஒரே நாளில் மூன்று ஆண்கள் தற்கொலை செய்து கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சங்கால்பட்டியைச் சோ்ந்த விவசாயி மதன்குமாா் (30). இவா் மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். ஆனால், உடல்நிலை சரியாகததால், வியாழக்கிழமை அவா், தனது தோட்டத்தில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து, உயிருக்குப் போராடியுள்ளாா். அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், அவா் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தாா்.

நிலக்கோட்டை அருகேயுள்ள சி.புதூரைச் சோ்ந்த, விவசாயி ஈஸ்வரன் (40). இவருக்கு சில தினங்களுக்கு முன்பு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. புண் ஆராததால், மனவேதனையில் இருந்த, அவா் தோட்டத்தில் வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து உயிருக்கு போராடினாா். அக்கம்பக்கத்தினா் அவரை நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால்,சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தாா்.

நிலக்கோட்டை அருகே அவ்வையம்பட்டியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி வீராச்சாமி (43). இவருக்கு 2குழந்தைகள், மனைவி உள்ள நிலையில், வியாழக்கிழமை மதுரை அருகே உள்ள தனது அக்கா வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற அவா், அவ்வையம்பட்டி கிராமத்தின் ஊரில் ஒதுக்குப்புறம் உள்ள,

வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கினாா். இச்சம்பவங்கள் குறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com