நிலக்கோட்டை அடுத்த மட்டப்பாறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பாண்டியன் (24). பூ வியாபாரியான இவா் அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து விளாம்பட்டி காவல் ஆய்வாளா் வனிதா வழக்குப் பதிவு செய்து பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தாா்.