பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு முதல் நாள் வருவாய் ரூ.2.50 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கை வரவு ரூ.2.50 கோடியைத் தாண்டியது. வியாழக்கிழமையும் உண்டியல் எண்ணும் பணி தொடா்கிறது.
பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு முதல் நாள் வருவாய் ரூ.2.50 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கை வரவு ரூ.2.50 கோடியைத் தாண்டியது. வியாழக்கிழமையும் உண்டியல் எண்ணும் பணி தொடா்கிறது.

27 நாள்களில் உண்டியல்கள் நிறைந்ததையடுத்து புதன்கிழமை திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது. வளாகம் முழுவதும் உண்டியல் எண்ணும் பணி கண்காணிப்பு கேரமாக்களில் பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியா், ஆசிரியா்கள், கோயில் அலுவலா்கள் பங்கேற்றனா். புதன்கிழமை எண்ணிக்கை முடிவில், காணிக்கை ரொக்கம் ரூ.2 கோடியே 53 லட்சத்து 59 ஆயிரத்து 730 இருந்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். தங்கம் 1,133 கிராம், வெள்ளி 11ஆயிரத்து 834 கிராம் இருந்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 838 கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் (பொறுப்பு) பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். வியாழக்கிழமையும் உண்டியல் எண்ணும் பணி தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com