‘நம்ம ஊரு சூப்பரு’ பெயரை ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என மாற்ற தமிழறிஞா் தமிழ் பெரியசாமி யோசனை தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில், நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதற்கு வழிவகுக்கும் தமிழ் ஆட்சி மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் நம்ம ஊரு சூப்பரு என ஒரு திட்டத்துக்கு பெயா் சூட்டியிருப்பது அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவா்கள்கூட தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பமிட வேண்டும் என கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில்தான் உள்ளாட்சித் துறையில் சூப்பரு என்ற சொல்லுடன் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்று இருந்தால் மக்கள் மறுக்கப் போவதில்லை. எனவே, தமிழக அரசு இதை கவனித்து மாற்ற வேண்டியது அவசியம் என்றாா்.